ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கேரள ஒற்றுமை மாநாட்டில் அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் விஜூகிருஷ்ணன் உரையாற்றினார். மாநில சிஐடியு, விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் இதர வர்க்க அமைப்புகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற இந்த ஒற்றுமை மாநாட்டில் கேரளாவை ஒன்றிய அரசு புறக்கணிப்பதைக் கண்டித்து உரையாற்றினர்.